Horticulture

Wednesday, 17 March 2021 08:54 AM , by: Elavarse Sivakumar

வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் குறித்த 2 நாள் பயிற்சி முகாம்  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) நடைபெறவுள்ளது.

பயிற்சி முகாம் (Training camp)

இந்த 2 நாள் பயிற்சி நாளையும், நாளை மறுநாளும் (March 18 and 19)நடைபெற உள்ளது. தினமும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இதில் கீழ்கண்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegtables and fruits)

  • பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)

  • பழரசம் (Squash)

  • தயார் நிலைபானம் (Ready - to - serve beverage)

  • ஊறுகாய் (Pickles)

  • தக்காளி கெட்சப் (Tomato katchup)

  • ஊறுகனி (Candy)

  • பழப்பார் (Fruit bar)

கட்டண விபரம் (Payment details)

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 + 18% GST மட்டும் செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்.

வரைவோலை (Draft)

பயிற்சிக் கட்டணத்தைப், பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், கோயமுத்தார் -3 என்ற பெயரில் வாங்கி வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி (Address to send)

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-3 என் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-6611268 ஆகும்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

சொட்டுநீர்ப் பாசனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை எவை?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)