மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 July, 2021 11:25 AM IST

நீலகிரியில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாய மாவட்டம் (Everyone can drink)

நீலகிரியின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுக்கு முன், அந்த மாவட்டம் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அதற்கான நடைமுறைகளைக் கடைப்பிடித்து இயற்கை விவசாயம் மேற்கொள்வதைத் தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

50 சதவீதம் (50 percent)

இதன்மூலம் மாவட்டம் முழுவதும், 50 சதவீதம் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிவருவதைத் தோட்டக்கலைத் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மானியம் (Subsidy)

அதே நேரத்தில் விவசாயிகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசு, 50 முதல் 100 சதவீதம் வரை, வேளாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

உயர் ரக காய்கறி (High quality vegetable)

நீலகிரியின், இயற்கை விவசாயத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நடப்பாண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம், உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் உயர் ரக காய்கறி என, இயற்கை சாகுபடிக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலக்கு (The goal)

இதில் முதற் கட்டமாக, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற, அரசு திட்டம் வகுத்துள்ளது.

3,500 ஏக்கர் இலக்கு (Target 3,500 acres)

தற்போது அதன் பணிகள் வேகம் பிடித்துள்ளது வரவேற்கத்தக்கது. முதற்கட்டமாக, ஊட்டி, முத்தோரை, பாலாடா உட்பட சில பகுதிகளில், 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

English Summary: 3,500 acres target for organic farming!
Published on: 22 July 2021, 09:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now