மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 November, 2021 8:16 AM IST

விவசாயிகள் சூரிய ஒளி மின்வேலி அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதால், அதனைப் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண் பொறியியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டம் (Federal Government Program)

தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு, விவசாயப் பயிர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தி பாதிக்காத வகையில் விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயைப் பெருக்கவும் கைகொடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை 40% மானியத்தில் அமைக்க தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம்
2021-22ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு பாதுகாப்பு (Protection for crops)

சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக் காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்படும்.

இதன் மூலம் பயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன், விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

எனவே விவசாயிகள் தங்கள் நில பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5 வரிசை (ரூ.282/(மீ) 7 வரிசை (ரூ.313/மீ) அல்லது 10 வரிசை (ரூ.360/மீ) அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம்.

தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 566 மீட்டர் மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.மேலும் சூரிய ஒளி மின் வேலி அமைப்பிற்கான மொத்த செலவுத் தொகையில் 40% பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள் (Required Documents)

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தை உடனடியாக அணுகிப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு (Contact)

செயற்பொறியாளர் அலுவலகம், தொடர்புக்கு : 94436 36835, 04342-296948, உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், தர்மபுரி, தொடர்புக்கு : 94432 67032, 04342-296132,உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், கச்சேரி மேடு, அரூர், தொடர்புக்கு: 94420 07040, 04346-296077 தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
ச.திவ்யதர்சினி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

English Summary: 40% subsidy to set up solar power fence!
Published on: 29 November 2021, 08:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now