Horticulture

Monday, 14 November 2022 10:12 PM , by: Elavarse Sivakumar

உலகிலேயே அதிக நச்சுள்ள தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ள இந்த தாவரம், சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு மிகுந்தது.

ஆமணக்கு வகை


இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் இந்தக் கொடியத் தாவரம் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ரசினஸ் கம்யூனிஸ்' என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் பெயரிடப்பட்டது.

அதிர்ச்சி நச்சு

இங்கிலாந்தின் கொல்வின் விரிகுடாவில் உள்ள குயின்ஸ் கார்டன்ஸ் பூங்காவில் 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரம் இருப்பதை பெண்மணி ஒருவர் பார்த்து செல்போனில் படம் பிடித்து, தனது கணவருக்கு அனுப்பி உள்ளார். அப்பெண்ணின் கணவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும். 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரத்தின் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
பின்பு, அவர் பூங்கா நிர்வாகத்தை தொடர்புகொண்டு அந்த தாவரத்தை அகற்றுமாறும், எச்சரிக்கைப் பலகைகளை நிறுவுமாறும் பரிந்துரைத்தார்.

மேலும் படிக்க...

இத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!

ஆதாருக்கு 10 ஆண்டுகள்தான்- அச்சச்சோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)