Horticulture

Friday, 22 October 2021 10:06 AM , by: Elavarse Sivakumar

Credit : IndiaMART

கோவையில் சம்பாப் பருவத்துக்கு தேவையான 8 ஆயிரத்து 50 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி (Cultivation of horticultural crops)

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் இரா.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் நடப்புச் சம்பாப் பருவத்தில் நெல், பயறு வகை பயிா்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இந்தப் பருவத்திற்குப் பொதுவாக அக்டோபா் மாத இறுதிக்குள் விதைப்பு பணிகள் நிறைவுபெறும்.

8,500 டன் உரங்கள் இருப்பு (8,500 tons of fertilizer reserve)

இந்நிலையில் நடப்பு பருவத்துக்குத் தேவையான ரசாயன உரங்களான யூரியா - 1,150 டன், டி.ஏ.பி. - 960 டன், காம்ப்ளக்ஸ் - 2,890 டன், பொட்டாஷ் - 2,200 டன், சூப்பா் பாஸ்பேட் - 1,300 டன் என மொத்தம் 8 ஆயிரத்து 500 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ் போன்ற அங்கக உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் அனைத்தும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ் போன்ற அங்கக உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் அனைத்தும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உரத்தட்டுப்பாடு கிடையாது

இதனை வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். இத்துடன் விவசாயிகள் வயலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற வகையில் உரமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை உருவாக்க முயன்றால், அந்த உர நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)