Horticulture

Thursday, 10 December 2020 02:06 PM , by: KJ Staff

Credit : Minnambalam

வீட்டு தோட்டத்திற்கான இடுபொருட்களை, மானிய விலையில் பெற ஆதார் அவசியம் என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

மானிய விலையில் இடுபொருட்கள்:

தோட்டக்கலை துறை (Horticulture) வாயிலாக, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'உங்கள் வீட்டு தோட்டம் (Your home garden)' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மானிய (Subsidy) விலையில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் (Inputs) வழங்கப்படுகின்றன. விதைகள், தென்னை நார் கழிவு கட்டிகள், செடி வளர்ப்பு பைகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பின் விலை, 810 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆதார் அவசியம்:

தற்போது, சென்னையில் வீட்டு திட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் விற்பனையை, தோட்ட கலை துறையினர் துவக்கி உள்ளனர். மாதவரம் தோட்ட கலை பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட இடங்களில் விற்பனை நடந்து வருகிறது. மானியத்துடன் இடுபொருட்களை பெறுவதற்கு ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் புகைப்படம் (Photo) அவசியம் என, தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்.

வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தோட்டக்கலை துறையை அணுகி, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை சமர்ப்பித்து மானிய விலையில் இடுபொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே மாடித் தோட்டம் வைத்திருப்பார்களுக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!

வேளாண் பல்கலையில் ஆக்சிஜன் பூங்கா! மூங்கில் மரங்கள் நடவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)