பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 September, 2020 7:19 AM IST

விவசாயத்தின் சூட்சமங்களுள் ஒன்றே உரங்கள்தான். தகுந்த காலத்தில் தகுந்த பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தினால் மண் வளத்தை பாதுகாத்து, உற்பத்தியையும் பெருக்கிக்கொள்ள முடியும்.

அவ்வாறு இயற்கை விவசாயத்தில், காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுக்களை துவம்சம் செய்ய உதவுவது எதுவென்றால், அதுதான் அக்னி அஸ்திரம்.

தேவையான பொருட்கள் (Ingredients)

1. மாட்டுக்கோமியம்       - 20 கிலோ
2. புகையிலை                 - 1 கிலோ
3. பச்சைமிளகாய்            - 2 கிலோ
4. வெள்ளைப்பூண்டு        - 1 கிலோ
5.வேப்ப இலை                 - 5 கிலோ

தயாரிக்கும் முறை (Preparation)

முதல்படி (First Step)

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையில் மாட்டுக்கோமியம் 20 லிட்டர், புகையிலை 1 கிலோ, பச்சைமிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 1 கிலோ, வேப்ப இலை 5 கிலோ என அனைத்தையும் சேர்த்து, சுமார் 1 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். அதாவது 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.

இரண்டாம் படி (Second Step)

அதனை இறக்கி வைத்து, மண் பானையின் வாய்பகுதியில் துணியைக் கட்டிவிட்டு 2 நாட்கள் அதாவது 48 மணி நேரம் ஆற விட வேண்டும்.

நீரின் மீது ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கிவிட்டால், அதன் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

பின்பு வடிகட்டி வைத்துக்கொண்டு பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

குறிப்பு : மண்பானையைத் தவிர, வேறு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விட்டால், ரசாயன மாற்றம் ஏற்பட்டு, அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்.

பயன்படுத்தும் பயிர்கள் (Crops)

அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

பயன்படுத்தும் அளவு  (Quantity)

100 லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் என்ற விகிதத்தில் கலந்து,  பயிர்களுக்கு மாலை வேளையில் தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதால், காய்ப்புழு, தண்டுப்புழு உள்ளிட்டவை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

Credit : Maalaimalar

பயிர்கள் (Crops)

காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுத் தாக்கக்கூடிய அனைத்து பயிர்களுக்கும் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்.

அக்னி அஸ்திரத்தின் பயன்கள் (Benefits)

1.இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த அக்னி அஸ்திரம் மிகச்சிறந்த பூச்சிகொல்லியாகப் பயன்படுகிறது.

2. நன்மை செய்யும் பூச்சிகள் வளரும்.

3. தீமை செய்யும் பூச்சிகளுக்கு ஒவ்வா தன்மையை உண்டாக்குவதால், அவை பயிர்களை தாக்காமல் வெளியே செல்லும்.

4. இரசாயன மருந்து தெளித்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து இறக்க நேரிடும்.

5. அதேநேரத்தில், இயற்கை மருந்து தெளித்தால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்காது.மகசூலும் அதிகமாக இருக்கும். நன்மை செய்யும் பூச்சிகள் சாகாது.

மேலும் படிக்க...

அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தவிர்க்க மானியம் - நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

English Summary: Agni ashram that spreads stem worms - you know!
Published on: 06 September 2020, 06:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now