மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 June, 2021 7:09 AM IST
Credit: IndiaMART

வேளாண் துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வால் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைநார் உற்பத்தியும், அதனால் வருவாயும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வாழை சாகுபடி (Banana cultivation)

திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி, பழவூர், கொண்டா நகரம், கல்லூர், மானூர், ரஸ்தா, அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தை, மாசிப்பட்டத்தில் வாழை சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

வாழை நார் (Banana fiber)

வாழையில் இலை, பூ, காய், பழம், தண்டு மட்டுமன்றி வாழைநாரும் வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளன.

மட்டை உரம் (Bat compost)

வாழைத்தார் அறுவடைக்குப்பின் வாழை மட்டைகளை வயலிலேயே எரித்து உரமாகத் தான் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

பன்மடங்கு அதிகரிப்பு (Multiple increase)

இந்நிலையில், விவசாயிகளிடம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக வாழைநார் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பல்வேறு ரகம் (Different type)

இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகின்றன. ஏத்தன், ரதகதளி, செவ்வாழை உள்ளிட்ட அனைத்து ரக வாழையில் இருந்தும் நார் பிரித்து எடுக்க முடியும்.

300 கிராம் (300 Gram)

ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நார் கிடைக்கும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்த 48 மணி நேரத்தில் நார் பிரித்து எடுக்கப்பட வேண்டும்.

20 கிலோ நார் (20 kg fiber)

வாழை நாரில் இருந்து நீர்ப் பகுதி வெளியேற அதனை சூரிய வெளிச்சத்திலோ, அல்லது நிழலிலோக் காய வைக்க வேண்டும். வாழை நாரைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம்.

வருவாய் அதிகரிக்கும் (Revenue will increase)

எனவே புதுக்கோட்டையைப் போன்று, பிற மாவட்ட விவசாயிகளும், விழிப்புணர்வுடன் செயல்பட்டால், வாழை நார் உற்பத்தியும் அதிகரிக்கும். அதிக வருவாயையும் ஈட்ட முடியும்

மேலும் படிக்க...

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Awareness increases banana fiber production - Farmers happy!
Published on: 15 June 2021, 10:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now