Horticulture

Tuesday, 29 June 2021 10:12 PM , by: Elavarse Sivakumar

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைச் சாகுபடி, விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி,தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சி.பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:

சட்டப்படி குற்றம் (Crime under the law)

மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப் படாத களைக்கொல்லி எதிர்ப்புச் சக்தியுடைய மரபணு மாற்றம் செய்த (எச்.ஏ பருத்தி விதைகளை சாகுபடி மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

பருத்தி சாகுபடி (Cotton cultivation)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பி.டி. ரக விதைகள் (B.D. Varieties of seeds)

இன்னும் ஒரு மாதத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருத்தி சாகுபடி பருவம் ஆரம்பிக்க உள்ள நிலையில் காய் புழுக்கள் எதிர்ப்பு சக்தியுடைய பி.டி. ரக பருத்தி விதைகளை மட்டும் சாகுபடி, விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விதை மாதிரி (Seed sample)

விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப் பட்டு, மாவட்டத்துக்கு வரும் அனைத்து நிறுவனங்களின் பருத்தி விதைகளில் அனைத்து குவியல் விதைகளும் விதை மாதிரி எடுக்கப்படுகிறது.

முளைப்புத் திறன் பரிசோதனை (Germination test)

பின்னர் முளைப்புத் திறன், அகத்தூய்மை ஆகிய சோதனைகளும் செய்யப்படுகின்றன. இருப்பினும் தமிழகத்திலும் களைக் கொல்லி மரபணு மாற்றம் செய்யப் பட்டதா என்பதை அறிவதற்கு மகாராஷ்டிர ஆய்வகத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.

உரிமம் ரத்து (License revoked)

இவ்வாறு மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய பருத்தி விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்திருந்தாலோ அந்த நிலையங்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப் படுவதுடன் நீதிமன்ற வழக்கும் தொடரப்படும்.
சாகுபடி செய்த விவசாயிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பயிரிடுவதற்கு முன் பயிரின் விலை மற்றும் தேவை அறியப்படும் 

ஜூலை தொடக்கத்தில் இந்த 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கன மழை - வானிலை மையம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)