மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 September, 2021 7:59 AM IST

உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் (organic farming)

இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் என்றால், அது இயற்கை விவசாயம்தான்.
ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்பவும், தேவைக்கு அதிகமாகவும், கூடுதல் மகசூல் மற்றும் லாபத்திற்காகவும் ரசாயன உரங்கள் பக்கம் விவசாயிகள் தஞ்சம் அடைந்தனர். இதன் விளைவாகவே மண்ணில் வளம் குன்றியதுடன், மனிதர்களின் ஆரோக்கியத்திலும் இடி விழுந்தது.

இயற்கை உயிர் உரம் (Natural bio-fertilizers)

குறிப்பாகப் பயிர்களுக்கு ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருவதால், உரத்தேவையைக் குறைக்க இயற்கை உயிர் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.

யூரியாவைக் குறைக்க (To reduce urea)

இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மைக்குழு அலுவலர்கள் கூறியதாவது: பயிறுவகைப் பயிர்களுக்கு பயிறு வகை ரைசோபியம், தானியப் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் இடுவதன் வாயிலாகக் காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு கிரகித்துக் கொடுக்கிறது.இதன் வாயிலாக பயிர் வளர்ச்சியை பொருத்து யூரியா உர தழைச்சத்து தேவையைக் குறைத்து கொள்ளலாம்.

பாஸ்பரஸ் சத்து (Phosphorus nutrient)

அதேப் போன்று பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இடுவதன் வாயிலாக மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தை பயிர்களுக்கு கிடைக்க கூடிய நிலைக்கு மாறுதல் செய்கிறது.

செறிவூட்டிய உயிர் உரம் (Concentrated bio-fertilizer)

இதன் வாயிலாக பாஸ்பரஸ் உரத்தேவையை குறைக்கலாம். செறிவூட்டிய உயிர் உரம் ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும். உயிர் உரத்தினை, நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலக்க வேண்டும்.

அதனுடன் சிறிதளவு அரிசிக்கஞ்சி மற்றும் சர்க்கரைப்பாகுச் சேர்த்து நன்குக் கலக்கித் தண்ணீர் தெளித்துவர வேண்டும். உயிர் உரங்கள் தொழு உரத்தில் பல்கிப் பெருகி செறிவூட்டப்படுகிறது. இதனை பயிர்களுக்கு இடுவதன் வாயிலாக நல்ல விளைச்சல் பெறலாம்.

50 சதவீதம் மானியத்தில் (At a 50 percent subsidy)

உயிர் உரங்களுக்குத் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் பயிறுவகை திட்டத்தின் வாயிலாக ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும், எண்ணெய்வித்துப் பயிர்கள் திட்டத்தின் கீழ் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

English Summary: Bio-fertilizers at 50% subsidy to farmers!
Published on: 19 September 2021, 07:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now