Horticulture

Monday, 22 October 2018 04:23 PM

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.

இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.

இரகங்கள்
கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி

மண்
நல்ல வடிகால் வசதியுடைய மணல் கலந்த பசளை மண் அல்லது உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

விதைப்பு பருவம்

ஜூன் - ஜூலை.

விதையளவு
500 கிராம் / எக்டர்.

இடைவெளி
60 x 45 செ.மீ

நாற்றங்கால்
7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை தயார் செய்தல் வேண்டும். விதைகளை 10 செ. மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் 15:15:15 NPK காப்ளக்ஸ் உரத்தினை விதைத்த 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.

நடவு
ஆரோக்கியமான நாற்றுகளை 45 செ.மீ  இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

உர மேலாண்மை

தொழுஉரம் 20-25 டன்/எக்டர், 60, 100 மற்றும் 60 கிலோ NPK/எக்டர் உரத்தினை அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.

நோய்கள்
ஆந்தராக்னோஸ்

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்கவும்.
காய் அழுகல் நோய்

ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிக்கவும்.

சாம்பல் நோய்

0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிக்கவும்.

மகசூல்: 25 - 35 டன் / எக்டர். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)