மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2021 10:47 AM IST

ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெற்பயிருக்கான நுண்ணுாட்ட உரம் 50 சதவீதம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி (Paddy cultivation)

ராமநாதபுரம் பகுதியில் 18ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இளம் பயிராக உள்ள நெற்பயிருக்கு நுண்ணுரம் இடுவதற்கு இதுவே ஏற்ற தக்க தருணமாகும்.

இதனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு வேளாண், உழவர் நலத்துறையால், நெல் நுண்ணுாட்ட கலவைத் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நெல் நுண்ணுாட்டக் கலவையில் துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, போரான் சத்துக்கள் அடங்கியுள்ளன.

பயன்படுத்துவது எப்படி? (How to use?)

  • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுாட்ட உரத்தை மணலுடன் கலந்து நெல்வயலில் சீராகத் தூவ வேண்டும்.

  • நெற்பயிர் செழித்து இலைகள் வளர்வதுடன் தழைசத்து, மணிசத்து எளிதாக எடுத்துக்கொள்ளும்.

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மண்வளம் பெருகுகிறது.

50% மானிய விலை (50% subsidy price)

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களில் 50 சதவீத மானிய விலையில் நுண்ணுாட்ட உரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

தகவல்
கோபாலகிருஷ்ணன்
ராமநாதபுரம் உதவி இயக்குனர்

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன்!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

English Summary: Distribution of micronutrients for paddy cultivation - 50% subsidy!
Published on: 30 October 2021, 10:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now