மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 June, 2021 7:09 AM IST

திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி, பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என கடலூர் வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மண் வளம் பெருகும் (Soil fertility will increase)

விவசாயத்தைப் பொறுத்தவரை, உரங்கள் இன்றியமையாதவையாகவேக் கருதப்படுகின்றன. ஏனெனில், மண்ணில் வளத்தைப் பேணிக் காக்கவும், மகசூலை அதிகரிக்கவும் இவை வித்திடுகின்றன.

அதிலும் திரவ உயிர் உரங்கள் என்பதை பயிர்களுக்கு இதயம் போன்றவை. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களில் அதிக மகசூல் உறுதி செய்யப்படுகிறது.

இது குறித்து கடலூர் வேளாண்துறை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது :

மண் வளம் பாதிப்பு (Impact on soil fertility)

வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியானப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கும் சூழல் உள்ளது.

உயிர் உரங்கள் (Bio-fertilizers)

இதைத் தவிர்க்க விவசாயிகள் உயிர் உரங்களைத் தவறாமல் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீண்டும் வளமையாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதிக மகசூல் (High yield)

இதன் மூலம் நஞ்சற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க முடியும். குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அங்கக இடு பொருட்களான திரவ உயிர்உரங்களை பயன் படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அதிக மகசூல் கிடைக்க அதிகளவில் வாய்ப்பு உருவாகிறது.

இதற்காக கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லமும், பயறு வகைகள், மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவை வழங்கப்படுகிறது.

மானிய விலையில் விற்பனை (Sale at subsidized prices)

நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோபாஸ் உள்ளிட்ட எட்டு வகையான உயிர் உரங்கள் ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்களாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் அதிக தரத்துடன் வினியோகம் செய்யப்படுகிறது.

வேளாண்துறை அறிவுறுத்தல் (Agricultural instruction)

எனவே, குறுவை, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் திரவ உயிர் உரங்களைக் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

English Summary: Do you know the formula for getting high yield in crops?
Published on: 13 June 2021, 06:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now