Horticulture

Saturday, 27 July 2019 05:08 PM

மண்புழு குளியல் நீர் தயாரித்தல்

பயிர்களுக்கு இந்த நீரை தெளிப்பதன் மூலம் பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்கி, பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

* துளையிட்ட மண்பானை எடுத்துக்கொள்ளவும்.

* இதன் அடிப் பகுதியில் 5 செ.மீ உயரத்திற்கு ஜல்லி கலந்து சரளை மணலை நிரப்ப வேண்டும்.

* அதன் மீது மக்கிய குப்பையினை பானை முழுவதும் நிரப்பப் பட வேண்டும்.

* இதில் 100-150 மண் புழுக்களை விடவும்.

* இதற்கு மற்றொரு வாளியை வைக்கவும்.

* இந்தத் தண்ணீர் மண்புழுக்களை கழுவிக் கொண்டு அவைகளின் உடல் மேல் இருக்கும் ஹார்மோனை சேர்த்துக்கொண்டு வெளியேறும்.  இதை நீங்கள் சேகரிக்கலாம்.

* சேகரித்த நீர் தேயிலை வடிநீர் போல் இருக்கும்.

* இதனை அப்படியே எல்லாப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். (அல்லது) இத்துடன் 1-௨ லிட்டர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

மண்புழு உரத்தில் கிடைக்கும் சத்துக்கள்

மண்புழு ஒரு நாளில் 6 முதல் 7 முறை உணவு எடுத்துக்கொள்ளும். ஒரு வேலைக்கு 2 கிராம் மக்கு எடுத்துக் கொண்டால் அதன் கழிவில் வெளிவரும் சத்துக்களை கீழே காண்போம்.

அந்த மக்கில் மண்புழு 1 மில்லி கிராம் தழைச்சத்து உட்கொண்டால் 6 மில்லி கிராம் தழைச்சத்தாகவும், 1 மில்லி கிராம் சாம்பல் சத்து உட்கொண்டால் 11 மில்லி கிராம் சாம்பல் சத்தாகவும் மண்புழு கழிவில் வெளிவரும்.

ஒரு நாளைக்கு 6 முதல் 7 முரை உணவு உண்ணும். 36-42 மில்லி கிராம் தழைச்சத்து 42-49 மில்லி கிராம் மணிச்சத்து, 66-77 மில்லி கிராம் சாமல் சத்தும்  கிடைக்கிறது.  இதைத் தவிர பயிர்கள் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களும்  கிடைக்கும். 

K.Sakthipriya
krishi Jagran

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)