மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 October, 2021 6:09 AM IST
Credit : Vivasayam

பூச்சித்தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாக்கும் அஸ்திரமாகத் தற்போது இனக்கவர்ச்சிப் பொறிகள் பங்காற்றுகின்றன.

பூச்சிகளை அழித்தல் (Insect extermination)

தற்போது பயிர் பாதுகாப்பில் இரசாயன பூச்சி கொல்லிகளைக் காட்டிலும் இனக்கவர்ச்சிப் பொறியின் பங்கு கூடி வருகிறது. பூச்சிகளைக் கண்காணிப்பது, கவர்ந்து அழிப்பது இனக் கவர்ச்சியின் முக்கிய வேலையாகும். குறிப்பாக அதே இனத்தைக் கவர்ந்து அழிப்பது, இனக் கவர்ச்சி பொறியின் தனிச்சிறப்பாகும்.

சிறப்பு அம்சங்கள் (Special Features)

பிரமோன்

ஒரே இனத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சி, அந்துப் பூச்சியைக் கவர்ந்திழுக்க ஒரு வித வாசனைப் பொருளைத் தன் உடலினுள் சுரக்கும். இந்த வாசனை காற்றின் மூலம் வெளியே பரவும். இதற்கு பிரமோன் என்று பெயர்.

அதே இனத்தைச் சேர்ந்த ஆண்பூச்சிகள், பெண் பூச்சிகளைத் தேடிச் சென்று புணரும். பின்னர், முட்டை இட்டு இனப் பெருக்கம் செய்யும். இந்த முட்டையில் இருந்து வெளியே வரும் புழுக்கள் பயிர்களைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கும்.

மலடாக மாற்றும் (Sterile)

இவ்வாறு முட்டை இடுவதைத் தடுக்கவே இனக் கவர்ச்சி பொறி பயன்படுகிறது. ஆண் பூச்சிகளுடன் சேராத பெண்பூச்சிகள் கருவுறாத முட்டைகள் இடும். இதில் இருந்து புழுக்கள் வாரது.


வகைகள் (Types

பூச்சிகளைத் துவம்சம் செய்யும் இனக்கவர்ச்சிப் பொறிகள் 3 வகைப்படும். அவை

  • குழாய் போன்ற நீண்ட பாலித்தீன் பைகள் அடங்கியப் பொறி

  • நீருள்ள வட்ட பொறி

  • முக்கோன வடிவ அட்டை வடிவ பொறி

இனக் கவர்ச்சிப் பொறி 10-12 எண்ணம் 30 முதல் 40 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். சராசரியாக தினமும் 2-5 பூச்சிகள் ஒரு பொறியில் வந்து விழும். இதிலிருந்தே பூச்சியின் தன்மையைக் கவனிக்க முடியும்.

பூச்சி மருந்து (insecticide)

தாக்குதலின் தன்மைக்கேற்ப அவ்வப்போதுப் பூச்சி மருந்தையும் தெளிக்கலாம். இதன் மூலம் பூச்சித் தாக்குதலில் இருந்துப் பயிர்களைப் பாதுகாக்க முடியும்.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்,

வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை

9443570289.

மேலும் படிக்க...

தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

English Summary: Ethnic trap that sterilizes insects!
Published on: 13 October 2021, 11:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now