Horticulture

Saturday, 13 November 2021 07:29 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

நம் வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான அனைத்துக் காலகட்டத்திலும், மரம் இன்றியமையாததாக உள்ளது.

மரம் வளர்ப்பு

இதை உணர்த்தும் வகையில், மரம் நடுவோம், மழை பெறுவோம், வாழ்வில் வளம்பெறுவோம் என்ற வாசகம் நம்மில் பலருக்கு பரிட்சயப்பட்ட ஒன்று. இருப்பினும், அதற்கென இடம் ஒதுக்கீடு செய்தல், பராமரிக்கும் செலவு என சிலக் காரணிகளைக் கருத்தில்கொண்டு, யாரும் முன்வருவதில்லை.

உன்னதப் பணி

ஆனால் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அவர் வழியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விக்ரம் ஆகியோர் பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு நம் சுவாசத்திற்கு வித்திட்டுச் சென்றனர்.

விவசாயிகளுக்கு இலவசம் (Free for farmers)

எனவே இந்தப் புன்னியப்பாதையில், மரம் வளர்க்க விரும்பும் விவசாயியா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குதான்.

தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் ரூ.28.39 லட்சம் மதிப்பில் 1,89,300 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இக்கன்றுகளை வனத்துறை நாற்றாங்காலில் இருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு மானியம்? (How much subsidy?)

  • வரப்பு நடவுக்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்கள் என்றால் 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும்.

  • பராமரிப்பு ஊக்கத் தொகையாக ஒரு கன்றுக்கு ஆண்டுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

  • எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக உங்கள் அருகில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

தகவல்
தேனி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

தாயுள்ளத்தை வெளிப்படுத்திய சிங்கப்பெண்- முதல்வர் பாராட்டு!

அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)