மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 November, 2021 12:17 PM IST

விவசாயிகளிடம் தேவையற்ற இடுபொருட்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என உரக்கடைகளுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட்சியர் ஆய்வு  (Collector inspection)

நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் ஆட்சியர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர், ஆட்சியர் பேசியதாவது:

புகார்கள் (Complaints)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையைவிடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன.

மீறுவதுக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இதுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரக் கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகையைப் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின்பேரில் விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டைகளின் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

புகார் அளிக்க (To complain)

விவசாயிகள் உரங்கள் மற்றும் அதன் தொடர்பாக புகார்களை 7397671300 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தெரிவிக்கவும்.

ஆட்சியர் எச்சரிக்கை (Collector warning)

உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின்பேரில் விற்பனை செய்யக்கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) என்.குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!

வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!

 

English Summary: Farmers should not be forced to buy other inputs!
Published on: 03 November 2021, 11:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now