மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 January, 2021 8:58 PM IST
Credit : Britannica

இன்றைய உலகில் இரசாயன உரங்கள் பெருகி விட்ட நிலையில், இயற்கை முறையில் நஞ்சில்லாமல் காய்கறி சாகுபடி செய்வது தான் சிறந்தது. இதற்காக தமிழக அரசின் தோட்டக்கலை துறை (Horticulture Department) சார்பில் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் இயற்கை முறைக்கு திரும்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு கிராமங்களில், இயற்கை விவசாயக் குழுக்கள் தொடங்கி நஞ்சில்லா காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

சாகுபடிக்கான குழு

சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான (Cultivation) குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி அரிசுதன் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து பேசினார். நஞ்சில்லா காய்கறிகளின் மூலம், உடல் நலம் பாதுகாக்கப்படும். இயற்கை உரங்களைப் (Natural compost) பயன்படுத்துவதால், உரச்செலவும் குறைவு தான்.

இயற்கை முறையில் சாகுபடி

பூச்சியியல் உதவி பேராசிரியர் விஜயராகவன் பூச்சிகள் (Pest) குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை (Control Methods) குறித்து பேசினார். கீரப்பாளையம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் இயற்கை முறையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். வேளாண்மை பல்கலைக்கழக விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில், கொள்ளிடம் உப வடிநில திட்டம் செயல்படுத்தலின் கீழ் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடி செய்வதற்கான 20 விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்தனர்.குழு தலைவராக சற்குணவதி திராவிடமணியையும், செயலாளராக ஜெயராஜையும் நியமனம் செய்தனர். நிகழ்ச்சியில், விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். இளநிலை ஆராய்ச்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு! ஆட்சியர் உறுதி!

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!

English Summary: Farmers united to promote non-toxic vegetable cultivation!
Published on: 21 January 2021, 08:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now