மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 September, 2021 8:18 AM IST

மண்ணிற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்காத இயற்கை விவசாயத்தில், பயன்படுத்த வேண்டிய உரங்களைப் போல, தவிர்க்க வேண்டிய உரங்களும் இருக்கின்றன. அவற்றைத் தவிர்ப்பது மண்வளத்திற்கு நன்மை பயக்குவதாக அமையும்.

தேசிய அங்க உற்பத்தி திட்டம் (National Organic Production Program)

தேசிய அங்க உற்பத்தி திட்டம் NPOP கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல் படுத்த பட்டு வருகிறது. இதில் மண் வளத்தை பெருக்க உதவும் இடுபொருட்கள்,பயிருக்குப் பாதுகாப்பு தரக் கூடியப் பொருட்களும் உள்ளன. அதேநேரத்தில் தவிர்க்க வேண்டிய இடுபொருட்களும் உள்ளன.
தேசிய அங்க உற்பத்தி திட்டத்தின் கையோட்டில், எதை இடலாம் என்றும் எதைத் தவிர்க்கலாம் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அங்கக வேளாண்மை(Organic Farming)

இயற்கை வேளாண்மை என்பது சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காத இடுபொருட்களைப் பயன்படுத்தி, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நலனை மட்டுமே பேணி பாதுகாத்து பயிர் சாகுபடி செய்யும் முறையாகும்.

அபிடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 33நிறுவனங்கள் தான் ஆர்கானிக் சான்றிதழ் வழங்கு கின்றன.

அனுமதிக்கப்பட்ட இடுபொருட்கள் (Permitted to use input)

  • விதைகள் மற்றும் இனப்பெருக்க பொருட்கள் சான்றிதழ் பெற்ற அங்கக வேளாண்மையில் இருந்து பெறப்பட்ட விதைகள்

  • பண்ணை உரம்

  • கோழிஉரம்

  • மாட்டு சிறு நீர் பயிர் கழிவுகள்

  • கம்போஸ்ட்

  • கடல்பாசி

  • இயற்கை முறையில் பெறப்பட்ட கால்சியம் கார்பனேட்,சோடியம் குளோரைடு, சாதாரண உப்பு

  • மெக்னீசியம் சல்பேட் ஜிப்சம்

  • உயிர் உரங்கள்

  • பயிர் பாதுகாப்பு மருந்துகளான பஞ்ச காவியா

  • ஜந்திலை கசாயம்

  • புங்கம் மற்றும் வேப்ப எண்ணெய்

  • என்.பி வி வைரஸ் ஒட்டுண்ணி

  • இறை விழுங்கி பொறிகள் பாலிகார்பனேட்


மேலே கூறிய இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்.

இதேபோல், Restricted சான்று பெற்ற நிர்வாக எழுத்து மூலம் அனுமதி பெறப்பட்ட இடுபொருட்களான, கம்போஸ்ட், பண்ணை பொருட்கள் இரசாயனக் கலப்பு இல்லா வைக்கோல் பேசிக் லாக் சல்பேட் ஆஃப் பொட்டாஷ் நுண்ணுட்டச் சத்துக்கள், போர்டோ கலவை, காப்பர் ஆக்ஸி குளோரைடு ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் (Prohibited substances)

  • மரபணு மாற்றப்பட்ட விதைகள்

  • மனித கழிவு உள்ள உரங்கள்

  • செயற்கை உரங்கள்

  • செயற்கையான பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள்

  • இரசாயன களைக்கொல்லி மருந்து

  • வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் புகையிலைச் சாறு, எத்தில் ஆல்கஹால்

போன்றவற்றைப் பயன் படுத்தக்கூடாது.


இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் இவற்றைத் தெரிந்து கொண்டால், சிறப்பான முறையில் சாகுபடி செய்ய முடியும்.


தகவல்

அக்ரி சு சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

காளானைத் துவம்சம் செய்யும் ஈக்கள் - கட்டுப்படுத்தும் முறைகள்!

TNAUவில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

English Summary: Fertilizers to Avoid in Organic Farming!
Published on: 27 September 2021, 08:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now