மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 June, 2021 7:05 AM IST
Credit : IndiaMART

கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில், விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தோட்டக்காலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விதைகள் இலவசம் (Seeds are free)

கிணத்துக்கடவில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில்,விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அரசு நடவடிக்கை (Government action)

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வாயிலாக, வெங்காய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

5கிலோ விதைகள் (5 kg of seeds)

விவசாயிகள் ஒவ்வொருவருக்கும், வீரியஒட்டு ரக பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காய விதைகள் தலா 2.5 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.

தேவைப்படும் விவசாயிகள், கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

விவசாயிகள், நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)

எனவே விவசாயிகள்  வேளாண்துறை அலுவலகத்திற்குச் சென்று, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை ஒப்படைத்து, தங்கள் தேவைக்கு ஏற்ப வெங்காய விதைகளைப் பெற்றுப் பயனடையுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க...

நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?

விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

English Summary: Free distribution of onion seeds to farmers in Coimbatore district! (1)
Published on: 18 June 2021, 08:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now