மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 October, 2021 8:01 AM IST

பருத்தியில் அதிக மகசூல் பெற்றுக் கூடுதல் வருமானம் ஈட்ட, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது என வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பல ஏக்கரில் பருத்தி (Cotton on several acres)

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம், மல்லாங்கிணர் பிர்கா உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.

கள ஆய்வு (Field study)

ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக மானாவாரி பருத்தி சாகுபடி நிலங்களில் கள ஆய்வு ஒருங்கிணைப்பாளார் ஸ்ரீகிருபா, வேளாண் வல்லுநர் சந்திரசேகரன் களப்பணியாளர்கள், வேம்புலு மற்றும் முன்னோடி விவசாயிகள் கள ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறுகையி,

  • பருத்தி பயிரில் பல வகையான பூச்சிகளும் நோய்களும் விதைத்து முதல் அறுவடை வரை தாக்கி அழித்து வருகின்றன.

  • பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதால் பூச்சிகளுக்கு ஏற்படும் எதிர்ப்பு சக்தி, சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தீமை தரும் பூச்சிகளை தாக்கும்.

  • அதேநேரத்தில் நன்மை தரும் பூச்சிகள் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உதவுகிறது.

  • ஏனெனில், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு என்பது இயற்கையோடு இணைந்த பயிர் பாதுகாப்பு நிர்வாக முறை.

  • இதன்மூலம், தீமை மற்றும் நன்மை தரும் பூச்சிகள் கண்காணிக்கப்படுகின்றன.

  • அதேநேரத்தில் சிறந்த உழவியல் உயிரியல் மற்றும் கைவினை முறையைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெறலாம்.

  • இதற்கான வழிமுறைகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டது.

இனக்கவர்ச்சிப் பொறி

தற்போது சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றுக்கான தடுப்பு நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதேநேரத்தில் காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 எண்ணம் வைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

94435 70269.

மேலும் படிக்க...

8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

English Summary: Gain profitable cotton - Integrated crop protection!
Published on: 13 October 2021, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now