Horticulture

Tuesday, 16 February 2021 08:54 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamani

சேலம் அரசு விதைப்பண்ணை (Govt Seed Farm) 131 டன் விதை நெல் விளைவித்து, இலக்கினை எட்டியது எட்டப்பட்டுள்ளது.

132 டன் இலக்கு (132 ton target)

சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு விதைப்பண்னையில், 2020 - 2021ம் ஆண்டு, நெற்பயிர் உற்பத்தி திட்டப்படி, 132 டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

இலக்கை எட்டியது (Reached the goal)

  • போதிய மழை, பண்ணையில் உள்ள, 6 கிணறுகளில் தேவையான தண்ணீர் இருப்பு இருந்தது.

  • இதனால், காரிப் பருவத்தில், 68 ஏக்கரில், நான்கு ரக விதை நெல் விளைவித்துக் கடந்த மாதம் அறுவடை செய்யப்பட்டது.

  • அதில், வெள்ளை பொன்னி - 44 டன், டி.கே.எம் 13 ரகம் - 34 டன், ஏ.டி.டி. 45 ரகம் -31 டன், கோ - 51 ரகம் -22 டன் விளைவித்து, இலக்கை எட்டியுள்ளது.

  • இதில், சேதாரம் உள்ளிட்டவையில், ஒரு டன் அளவுக்கு வீணாகிவிடும் என, அதிகாரிகள் கூறினர்.

விதை நேர்த்தி (Seed treatment)

விதை அலுவலர்கள் முன்னிலையில், செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து, ராபி பருவத்தில்,12 ஏக்கரில் ராகி, 18 ஏக்கரில் சோளம், 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?

உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)