Horticulture

Tuesday, 07 December 2021 08:09 AM , by: Elavarse Sivakumar

மனிதர்களானாலும் சரி, மண் என்றாலும் சரி, இரண்டுக்குமே ஊட்டச்சத்து தேவை.

உயர்விளைச்சல் (High yield)

அந்த வகையில், மண்ணின் வளம், தரமான விதைகள், தேவையான நீர் பாசனம் உள்ளிட்ட பலக் காரணிகள் பயிர் விளைச்சலுக்கு பேருதவி செய்தாலும், நாம் கொடுக்கும் நுண்சத்துக்கள்தான் உயர் விளைச்சலுக்கு வித்திடுகிறது.

அதனால்தான் இவற்றை ஊட்டச்சத்து டானிக் என்கிறோம். சரி நெற்பயிரில் உயர் விளைச்சலுக்கு எந்தெந்த நுண்சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

நுண்சத்துக்கள் (Micronutrients)

  • ஒரு எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை (Zinc sulphate) 50 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.

  • தமிழ்நோடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய நெல் நுண்ணூட்டக்கலவை 25 கிலோவை 250 கிலோ (1:10) தொழு உரத்துடன் கலந்து 30 நாட்கள் வைத்து ஊட்ட மேற்றி நடவுக்கு முன் இட வேண்டும்.

  • வயலில் ஒரு எக்டருக்கு 6.25 டன் தழை உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுஉரம் இடப்பட்டிருப்பின், ஒரு எக்டருக்கு 12.5 கிலோ ஜிங்க்சல்பேட் போதுமானதாகும்.

  • உவர் மண், களர் (சோடியம்) மற்றும் சோடிய மண்ணில் 37.5 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

  • கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 500 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். (ஜிப்சம் - கால்சியம் மற்றும் கந்தகச் சத்தின் ஆதாரம்)

  • இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள மண்ணாக இருப்பின் எக்டருக்கு 50 கிலோ பெர்ரஸ்சல்பேட்டுடன் 12.5 டன் தொழு உரம் கலந்து இட வேண்டும்.

  • அதேநேரத்தில், கந்தகச் சத்து பற்றாக்குறை இருப்பதுத் தெரியவந்தால், 40 கிலோ கந்தகத்தை ஜிப்சமாக இடலாம்.

  • இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள மண்ணாக இருப்பின் எக்டருக்கு 50 கிலோ பெர்ரஸ்சல்பேட்டுடன் 12.5 டன் தொழு உரம் கலந்து இட வேண்டும்

அதேவேளையில் கந்தகச்சத்துப் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தால், 40 கிலோ கந்தகத்தை ஜிப்சமாக இடலாம்.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை.
94435 70289

மேலும் படிக்க...

மீன் வளர்க்க ரூ.1.8 லட்சம் வரை மானியம்!

மகசூலை அதிகரிக்க விதைகளின் முளைப்புத் திறனை அறிவது அவசியம்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)