மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 September, 2020 7:51 AM IST

நெல் சாகுபடியின்போது, வரப்பில் உளுந்து, தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை பயிரிட்டால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

நெல் சாகுபடி (Paddy Cultivation)

இது குறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  • தற்போது பருவமழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வரப்பில் துவரை, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி பயனடையலாம்.

  • நெல் சாகுபடி மேற்கொள்ளும் வயலின் வரப்பில் ஒரு எக்டருக்கு 3 கிலோ உளுந்து அல்லது தட்டைப் பயறு விதைகளை வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் விதைக்கலாம். துவரை விதைகளை வரப்பின் ஓரத்தில் விதைக்கலாம்.

Credit : Seithi solai
  • தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எக்டருக்கு 3 கிலோ பயறு விதை ரூ.150 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவு மானியத்தில் வழங்கப்படுகிறது.

  • பயறு வகைப் பயிர்களை வரப்பில் விதைப்பதால் அவற்றை நோக்கி கவரப்படும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகின்றன. இவை நெற்பயிரைச் சேதப்படுத்தும் தத்துப்பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை தாக்கி கட்டுப்படுத்தும்.

  • பயறு உற்பத்தி அதிகமாகி சாகுபடிச் செலவின்றி மகசூல் கிடைக்கிறது. அவற்றின் தழைகள் ஆடு, மாடுகளுக்குச் சிறந்த புரதச்சத்து மிகுந்த தீவனமாக பயன்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: How to control pests in paddy field? Here is an alternative trick!
Published on: 28 September 2020, 07:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now