Horticulture

Thursday, 22 December 2022 07:34 PM , by: R. Balakrishnan

Indoor oxygen garden

மக்கள்தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பிராணவாயு என்பது குறைந்து கொண்டே வருகிறது.

ஆக்ஸிஜன் தோட்டம் (Oxygen Garden)

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கஸ்தூரி பாட்டி (வயது 70), கடந்த 20 வருடங்களாக வீட்டு தோட்டத்தில் அசத்தி வருகிறார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தாவரங்களை வளர்க்கும் விதமான முயற்சிகளை குடியிருப்போர் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கஸ்தூரி பாட்டி.

இதனை உணர்த்தும் விதமாக கோவையில் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய, பிராண வாயுவை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய செடிகளை அவர் கண்காட்சிக்கு வைத்துள்ளார். வீடு மற்றும் அலுவலகங்களில் அழகிற்காகவும், மன அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் இந்த செடிகள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் என்கிறார் அவர். இவரது இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.

இவர் தன்னுடைய வீடு முழுவதும் பசுமை தோட்டமாக அமைத்துள்ளார். வீட்டு தோட்டம் அமைப்பதில் சிறந்து விளங்கியதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இவருக்கு இரண்டாவது பரிசையும் வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பேரழிவுக்கான பாதை தான் பரந்தூர் விமான நிலைய திட்டம்: விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

விரைவில் வெளியாகப் போகும் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)