Horticulture

Monday, 27 December 2021 03:04 PM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

பூச்சி உண்ணும் தாவரம் ? இது குறித்துக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? பள்ளி பாடப்புத்தகத்தில் நீங்கள் படித்த நெப்பென்டிஸ் (nepenthes) என்ற அந்த விசித்திர தாவரம், கோவையிலும் இருக்கிறது.

நெப்பென்டிஸ் (nepenthes)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், பூச்சியியல் அருங்காட்சியகத்தின் பின்புறம் இருக்கும் இந்த செடியை, நீங்கள் பார்வையிடலாம்.ஒரு சில தாவரவியல் ஆர்வலர்கள், இந்தச் செடியை வீட்டில் வளர்க்கின்றனர்.

செடியின் சிறப்பம்சம் (The highlight of the plant)

  • இந்த செடிகளில் இருக்கும் ஒரு பை அல்லது குடுவை போன்ற அமைப்புதான் பூச்சிகளை கவர்ந்திழுக்கிறது.

  • ஈ, கொசு போன்ற சிறு பூச்சிகள், இந்த பை போன்ற அமைப்புக்குள் சென்றால், அந்த தாவரம் அப்படியே விழுங்கி செரிமானம் செய்து விடும்.

  • குடுவையில் 'பெப்சின்' என்ற திரவமும், குடுவையின் வாயில் தேன் சுரப்பிகளும் இருக்கின்றன.

  • கவர்ச்சிகரமான வண்ணம், புள்ளிகள், திட்டுக்களுடன் இருக்கும் குடுவை, சிறு பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்கிறது.

  • தேன், நிறம், வாசனையால் கவரப்பட்டு செல்லும் பூச்சிகள், குடுவையில் சறுக்கி கீழே விழுகின்றன.

  • உள்நோக்கி வளைந்திருக்கும் குடுவையின் முடிகளால், கீழே விழுந்த பூச்சியினங்கள் தப்பி மேலே வர முடிவதில்லை.

பெப்சின் திரவம் (Pepsin fluid)

இப்படி வசமாக சிக்கிக்கொண்ட பூச்சிகளை, குடுவையில் இருக்கும் பெப்சின் திரவம் செரிமானம் செய்து விடுகிறது.'இதன் மூலம் தனக்கு பற்றாக்குறையாக இருக்கும் நைட்ரேட், பாஸ்பேட் சத்துக்களை இந்த தாவரம் பெற்றுக்கொள்கிறது'

தகவல்
தாவரவியல் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க...

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)