சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 March, 2021 8:32 AM IST
Credit : Agrifarming

கால்நடைகளுக்கு ஏற்படும் பசுந்தீவன பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, விவசாயிகள் நேப்பியர் புல் சாகுபடியை அதிகரித்துள்ளனர்.

தீவனத் தட்டுப்பாடு (Fodder shortage)

கோடை காலம் தொடங்கிவிட்டாலே, கால்நடைகளைப் பொருத்தவரை, தீவனம் என்பது திண்டாட்டத்திற்கு வந்துவிடும்.

பராமரிப்பது சிரமம் (Difficult to maintain)

நீண்ட நேரம் வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது நல்லதல்ல.
மாலை வேளைகளில் நிழற்பாங்கானப் பகுதிகளைத் தேடிச் சென்று மேய்ச்சலுக்கு விட வேண்டும். அவற்றைப் பராமரிப்பதும் சிரமம்.

நேப்பியர் புல் சாகுபடி (Napier grass cultivation)

அதேநேரத்தில், கால்நடைகளுக்குத் தீவனங்களைக் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழலும் ஏற்படும். இதனைக் கருத்தில்கொண்டு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேப்பியர் புல் சாகுபடியை அதிகரித்துள்ளனர்.

சவால் நிறைந்தது (Challenging)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், விவசாயிகளின் முக்கிய உபதொழிலாக கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி உள்ளது. மாடு வளர்ப்பில் முக்கியமாக, ஆண்டு முழுக்க தீவனப்பற்றாக்குறை ஏற்படாமல் பராமரிப்பது சவால் நிறைந்தது.

தற்போது, கோடை வெயில் அதிகரித்து உள்ளதால் தோட்டங்களில் இயற்கையாக வளரும் பசுந்தீவனங்கள் வளர்வதில்லை.இதனால், பசுந்தீவன உற்பத்தியை, பயிர் சாகுபடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது கட்டாயமாகிறது.

கலப்பு நேப்பியர் புல் (Mixed Napier grass)

இதில், மலை புல் என அழைக்கப்படும், கலப்பு நேப்பியர் புல் ரகம், கால்நடை களின் பசுந்தீவன தேவையை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வகை புல் செழித்து வளர, அதிக குளிர்ச்சியும், ஈரப்பதமும் தேவை என்பதால், சுழலும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து கரணைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயிகள் நம்பிக்கை (Farmers hope)

நேப்பியர் புல் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டைவிட தற்போது அதிகரித்திருப்பதால், கோடை காலத்தில் பசுந்தீவன தேவையைச் சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

கூடுதல் மகசூல் தரும் கலப்புப் பயிர் சாகுபடி!


வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!

English Summary: Napier grass cultivation to alleviate fodder shortage!
Published on: 18 March 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now