மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 December, 2020 8:35 AM IST
Credit : You tube

கோவையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மக்காச்சோளக் கதிர்களை கிளிகளிடம் காப்பதற்காக, நைலான் வலை அமைத்து, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அறுவடையாகும் மக்காச்சோளம் (Harvesting corn)

கோவையில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு, குவிண்டாலுக்கு, 1,800 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஒரு ஏக்கர் மக்காச்சோள தட்டு மூலம், 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மட்டும், கடந்த செப்., மாதத்தில், 500 ஹெக்டருக்கும் அதிகமாக மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.கதிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

கிளிகளால் தொல்லை (Harassment by parrots)

ஆனால், கூட்டமாக வரும் கிளிகள், கதிர்களை கொத்தி தின்றும், வீணடித்தும் நாசம் செய்கின்றன. இதை தடுக்க எண்ணிய முட்டத்துவயல் விவசாயியான விஜயகுமார், , நைலான் (Nylon)கொண்டு தயாரிக்கப்பட்ட வலையைப் பயன்படுத்துகிறார். அதனால் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து, விவசாயி விஜயகுமார் கூறியதாவது:

  • மக்காச்சோளம் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு, 30 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது.

  • அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த, இரண்டு முறை மருத்து அடிக்க வேண்டியுள்ளது. இது போன்ற நிலையில், பறவைகளால் சேதம் அதிகளவில் ஏற்படுகிறது.

  • குறிப்பாக, கூட்டமாக வரும் கிளிகளாலேயே சேதம் அதிகம்.

  • ஆனால் அதற்காக தோட்டத்தில், 24 மணி நேரமும் காவலுக்கு இருக்க முடியாது.

  • அதனால், சோதனை முயற்சியாக கிளிகளால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை தேர்வு செய்து, நைலான் வலை அமைத்தேன். நல்ல பலன் கிடைத்துள்ளது.

  • ஒரு ஏக்கருக்கு, நைலான் வலை அமைக்க, ஏழு ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே அரசு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும்18ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர் பாண்டியன்!!

மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு-ஒரு நாள் சிறப்பு பயிற்சி

மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!

English Summary: Nylon web to protect crops from parrots - Farmers' new tactic!
Published on: 15 December 2020, 08:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now