மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 September, 2020 5:39 AM IST

அரும்பாடுபட்டு விளர்க்கும் பயிர்களைத் தாக்கிப் பதம்பார்க்கும் பூச்சிகளை, இயற்கையான சில இலைகளைப் பயன்படுத்திப் பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்து விரட்டலாம்.

தாவரப் பூச்சிக்கொல்லிகள் (Plant Insecticide)

அத்தகையப் பூச்சிக்கொல்லிகள், தாவரப் பூச்சிக் கொல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவ்வாறு கிராமங்களில் கிடைக்கும் சில தாவரங்களைப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவை
ஆடாதோடை
நொச்சி
எருக்கு
வேம்பு
சோற்றுக் கற்றாழை.
எட்டிக் கொட்டை
மேலே சொன்னவற்றின் இலைகளைச் சேகரித்து, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தாவரப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கலாம்.

Credit : wikipedia

ஊறல் முறை(Soak Method)

தேவையான பொருட்கள்

நொச்சி
ஆடாதோடை,
வேம்பு
எருக்கன்
பிச்சங்கு (உண்ணி முள்),
போன்றவற்றின் இலைகள் 2 கிலோ எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் கோமியம், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாட்கள் வரை உறவு வேண்டும்.இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இந்தக் கரைசலில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

வேக வைக்கும் முறை (Boiling Method)

இந்த தாவரங்களின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2-லோ எடுத்து பாத்திரத்தில் போட்டு அத்துடன் 15 லிட்டர் நீர் ஊற்றி, 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். இலைகள் நன்கு வெந்தபிறகு சாற்றை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆறியபின் அதில் ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வடிச்சாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்துச் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

மேலும் படிக்க...

அங்ககச் சான்று பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்!

English Summary: Pest Insecticides - Prepare and Buy!
Published on: 29 September 2020, 05:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now