மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2021 12:01 PM IST
Credit : Dinamani

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப் பயறு (Green Gram) கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

நிகழாண்டு(2020-21) ராபி பருவத்தில் மீண்டும் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், சாக்கநாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உளுந்தும் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் இலக்கு (Purchase target)

இதன் ஒருபகுதியாக உளுந்து 140 மெட்ரின் டன்னும், பச்சைப்பயறு 160 மெட்ரிக் டன்னு
ம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரம் (Quality)

உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, காய வைத்து அயல் பொருள்கள் கலப்பின்றி கொண்டு வர வேண்டும்.

விலை (Price)

இவ்வாறு நன்கு காய வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதமும், பச்சைப் பயறு கிலோவுக்கு ரூ.71.96 வீதமும் கொள்முதல் செய்யப்படும்.
விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்

தஞ்சை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஏப்ரல் 1ம் தேதி முதல் 90 நாள்களுக்கு கொள்முதல் செய்யப்படும்.

தேவையான ஆவணங்கள் (Documents)

இத்திட்டதின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகிய ஆவணங் களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க....

இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?

உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!

காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

English Summary: Purchase of green gram from April - Attention farmers!
Published on: 15 February 2021, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now