மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 February, 2021 11:34 AM IST
Credit : News Bugs

வாழைக் கழிவுகளில் இருந்து சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநரும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தெரிவித்தார் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை யோசனைத் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது (The contract signed)

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணாதுரைக் கலந்துகொண்டார். இதில் வாழைக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மயில்சாமி அண்ணாதுரை கையெழுத்திட்டார். 

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வாழை அறுவடைக்குப் பிறகு 80 மில்லியன் டன் கழிவுப்பொருள் வீணாகிறது. இந்தியாவில் மிகப்பெரிய தொழில்துறைத் திறன் இருந்தும் இந்தக் கழிவுகளை முறையாக பயன் படுத்துவதில்லை.

விமானப் பாகங்கள் (Aircraft parts)

வாழை நாரைப் பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு ஒலி பேனல்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தயாரிக்கலாம்.

சிறந்த ஊட்டச்சத்து (Excellent nutrition)

பழங்கள், காய்கனிகளின் விளைச்சலை அதிகரிக்கவும், கார்பன் அளவைக் குறைக்கவும் வாழைப் பட்டையின் சாறு சிறந்த ஊட்டச்சத்தாக அமையும். தமிழகத்தில் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் சாகுபடியாகும் வாழையில் தார் அறுவடைக்குப் பிறகு 10 மில்லியன் டன் கழிவுகள் கிடைக்கின்றன.

இந்த அங்கக் கழிவகளை நிர்வக்கக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்திருப்பது பெருமைக்குரியது.வாழைக் கழிவுகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 3 டன்களுக்கும் மேலாக வாழை நாரை பிரித்தெடுக்க முடியும்.

சுழற்சிப் பொருளாதாரம் (Rotational economy)

இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களை உருவாக்கலாம். வாழை நார், வாழைப் பட்டை சாறு, வாழைப் பட்டை கழிவு, வாழைத் தண்டு எனப் பிரித்தெடுத்து, சுழற்சியான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.உமா பேசுகையில், வாழைக் கழிவுகளை நிர்வகிக்கும் திட்டத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன், ஐஐஐடி- காஞ்சிபுரம், மும்பை ஜென்கிரஸ்ட் தொழிற்சாலை ஆகியவை இணைந்து பணியாற்ற உள்ளன. இதற்கான ஒத்துழைப்பை மயில்சாமி அண்ணாதுரை வழங்குகிறார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க...

விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

அஜினோமோட்டோ ஒரு Slow Killer - தெரியுமா உங்களுக்கு?

English Summary: Recycling economy from banana waste - Myilsami Annathurai guaranteed!
Published on: 13 February 2021, 11:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now