அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 March, 2022 7:51 AM IST

காளான் உற்பத்திக் கூடம் அமைத்து வருமானம் ஈட்ட விரும்பும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தின் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டு பெண் விவசாயிகள் சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைக்கலாம். இதற்கு மொத்த செலவினம் ரூ.2லட்சம் ஆகும்.மொத்த செலவில், 50 சதவீதம் அதாவது ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.இந்தத் திட்டம் பெண் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு பெண் விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறோம். எனவே விருப்பம் உள்ளப் பெண் விவசாயிகள் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வக்குமாரை (9677776214,9790526223) ஆகிய செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தொட்டால் உயிர்பறிக்கும் தாவரங்கள்- Death plant!

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

English Summary: Rs 1 lakh subsidy to set up mushroom factory - Call for female farmers!
Published on: 11 March 2022, 11:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now