Horticulture

Sunday, 27 September 2020 07:34 PM , by: Elavarse Sivakumar

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1 எக்டருக்கு ரூ.3750 மானியம் வழங்கப்படும்.

  • இதேபோல் கீரை வகைகளுக்கு ரூ.2500 ஊக்கதொகை வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தில் விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம்.

Credit : Adupangarai

  • மேலும், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அங்கக சான்று பதிவு செய்ய கட்டணமாக ரூ.500 வழங்கப்பட்டு அங்கக சான்றளிப்பு துறையுடன் இணைந்து சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் (Nationalized Bank) மற்றும் 2 போட்டோ ஆகியவற்றுடன் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • மேலும் படிக்க...

வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!

காரைக்குடியில் காடை மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)