Horticulture

Tuesday, 01 December 2020 10:00 AM , by: Elavarse Sivakumar

Credit: You Tube

புதுக்கோட்டை மாவட் டத்தில் புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் நெய்வத்தளி கிராமத்தை சேர்ந்த மோக நாதன் என்ற விவசாயின் வயலில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சுருளிமலை, ஆலோசகர் திருப்பதி ஆகியோர் முன்னிலை யில் ஒரு எக்டர் பரப்பில் புங்கள் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நடவுப்பணிகளை ஆய்வு செய்த வேளாண்மைத்துதுறை இணை இயக்குநர் மா. பெரியசாமி , நடவுக்கு முன்பு உழவு செய்தல், குழி எடுத்ததல் நடவு மற்றும் நடவுக்கு பின்பு உள்ள நிலைகளைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தவும் அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர் கூறியதாவது:

  • எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட் டத்தில் 2020-21ஆம் ஆண்டு புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தின்கீழ் 5மீx4மீ இடைவெளியில் எக்டருக்கு 500 புங்கன் கன்றுகள் நடவு செய்வதற்கு மானியமாக ரூ.20000ம் வழங்கப்படும்.

  • இதன் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ 1000 என மொத்தம் எக்டருக்கு ரூ.21,000 வழங்கப்படுகிறது.

  • மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)