Horticulture

Tuesday, 07 September 2021 09:23 AM , by: Elavarse Sivakumar

சேலம் மாவட்டத்தில் துவரையை நடவு செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு, ஹக்டேருக்கு ரூ.5700 வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் சாகுபடி (Cultivation of pulses)

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் நிலம் சீதோஷணநிலை, பருப்பு சாகுபடிக்கு ஏற்றது.

இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் பருப்பு வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் மானியம் (Grant by Central and State Governments)

இந்நிலையில், துவரை பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடப்பாண்டு துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு, ஒரு ஹக்டேருக்கு 2,500 ரூபாய் மானியம் வீதம், 600 ஹக்டேருக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒரு ஹக்டேருக்கு 3,200 ரூபாய் வீதம் 100 ஹக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

மானியத்தில் விதைகள் (Seeds in subsidy)

அதனால், விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, துவரை விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

இனி உங்களுக்கு ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்- அரசின் விதிகளில் மாற்றம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)