மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 February, 2021 10:22 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில், ஐந்து லட்சம் காய்கறி நாற்றுக்கள் மற்றும் பூச்செடிகள் விற்பனை துவங்கியுள்ளது.

தோட்டக்கலைத் துறைக்கு, மாநிலம் முழுதும் பண்ணைகள் உள்ளன. இங்கு தரமான காய்கறி நாற்றுக்கள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், பூ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை விவசாயிகள் மட்டுமின்றி, பொது மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மழைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தோட்டக்கலை பண்ணைகளில், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரை உள்ளிட்ட, காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மல்லிகை, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூச்செடிகளும், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழ மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

5 லட்சம் இலக்கு (5 Lakh Target)

மொத்தமாக, 5 லட்சம் நாற்றுகள் மற்றும் பூச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் பண்ணைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

சென்னை, மாதவரம் தோட்டக்கலை பண்ணையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.

மானிய விலையில் விற்பனை (Sale at subsidized prices)

வீட்டு தோட்டம் அமைப்பதற்காக, தென்னை நார் கழிவு, விதைகள், செடி வளர்ப்பு பைகளும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தும்படி, தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...

சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

கோடை உழவின் அவசியம் மற்றும் பயன்கள்!

10 மரக்கன்றுகளை நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி! அதிரடி சலுகை!

English Summary: Sales target of 5 lakh vegetable seedlings - Horticulture organized!
Published on: 02 February 2021, 10:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now