Horticulture

Thursday, 16 May 2019 06:04 PM

விதை நேர்த்தி என்பது, விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து   பாதுகாப்பதாகும்சேமிப்பு விதைகளை பாதுகாக்க பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றை தனித்தோ அல்லது  ஒருங்கிணைத்து விதைகளின் மேல் இடுவதன் மூலம் மண் மூலமாக பரவும் நோய்கள் கட்டுப்படுத்துவதாகும்.

விதை நேர்த்தியின் பயன்கள்

பயிர்களில் நோய் பரவாமல் தடுகிறது.

விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.

சேமிப்பில் தாக்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாக்கிறது.

மண்ணில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

விதை நேர்த்தி வகைகள்

விதைக் கிருமிகளை நீக்குதல்

இம்முறையானது விதையுறையினுள் அல்லது விதைகளின் திசுக்களின் ஆழப் பரவி இருக்கும் பூஞ்சாண வித்துக்களை நீக்குதல் ஆகும். திறனுள்ள முறையில் பூஞ்சான் தொற்றுதலை நீக்குவதற்கு பூஞ்சாணக்கொல்லி விதையினுள் ஊடுருவிச் செல்லவேண்டும்.

விதைக் கிருமிகளை அழித்தல்:

விதையின் உட்புறத்தை தாக்காமல், விதையின் மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே இம்முறை ஆகும். இரசாயனக் கலவையில் விதைகளை பதப்படுத்தியும்,  நனைத்தும், பூஞ்சாணக் கொல்லி பொடிகள் மற்றும் திரவங்கள் ஆகியன சிறந்த முறையில் பலன் அளிக்கும். 

விதைகளைக் காத்தல்:

சிறந்த முளைப்பிற்காக இளம் விதைகளை மண் மூலமாக பரவும் கிருமிகளில் இருந்து ஆரம்ப கட்டத்திலேயே பாதுகாப்பது விதை காத்தலின் நோக்கமாகும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)