Horticulture

Monday, 01 February 2021 08:15 AM , by: Elavarse Sivakumar

சூரியசக்தி மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • வன விலங்குகளால் விவசாய நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தடுக்க சூரிய ஒடிளி மின்வேலி பெருமளவில் உதவுகிறது.

சூரிய ஒளி மின்தகடுகள் (Solar panels)

சூரியசக்தி மின்வேலியானது, சூரிய ஒளி மின்தகடுகள் (Solar panels) மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடியது.

பயிர்களுக்கு பாதுகாப்பு (Protections for Crops)

சூரியஒளி மின்வேலி அமைப்பதால், யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளால் விளைபொருட்கள் சேதமடையாமல் தடுக்க முடியும்.

மானியம் (Subsidy)

சூரியஒளி மின்வேலி அமைக்க தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

50% வரை கிடைக்கும் (Up to 50% available)

 

மேலும் சூரியசக்தி மின்வேலி அமைப்பிற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள (Contact)

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள் கோபி வேளாண் உதவி செயற்பொறியாளர் (9942303069), ஈரோடு உதவி செயற்பொறியாளர் (9443894843) ஆகியோருக்கும், ஈரோடு அலுவலக எண்ணிற்கும் (0424-2270067) தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

விவசாயத்துறையில் அதிமுக அரசின் சாதனைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)