மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 May, 2021 10:23 AM IST

விவசாயிகள் மானிய விலையில் துவரை விதைகள் நுண்ணூட்ட உரக்கலவை பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மானாவாரி விதைப்பு (Rainfed sowing)

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஓசூர் வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளது. துவரை மானாவாரி விதைப்பு, 1,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பிற மாவட்டங்களுக்கும் (To other districts)

இதனை கருத்தில் கொண்டு நாற்று விட்டு நடவு செய்யும் புதிய முறை மாநிலத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் ஆரம்பித்து மற்ற மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டு வருகிறது.

இதற்குத் தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில், பி.ஆர்.ஜி., 1, பி.ஆர்.ஜி., 5, மற்றும் கோ-8 ஆகிய ரகங்கள், 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகள் பெறு வதற்காக, ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உரங்கள் (Fertilizers)

மேலும் துவரைப் பயிர், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் நன்கு வளர உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட உரக்கலவை உள்ளிட்டவை 50 சதவீதம் மானிய விலையில் தற்போது ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

வோளாண் துறை  (Department of Agriculture)

எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயனடையலாம் என வேளாண் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!

English Summary: Subsidized Natural Fertilizers and Pulses Seed Micronutrient Fertilizer!
Published on: 12 May 2021, 10:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now