மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 July, 2021 10:24 AM IST
Credit : IndiaMART

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

செலவு அதிகம் (The cost is high)

விலைவாசி ஏற்றத்தில் காரணமாக விவசாயத்திற்கு ஆகும் சாகுபடிச் செலவு, அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நிதிச்சுமையைச் சந்திக்க நேர்கிறது.

மானியம் (Subsidy)

எனவே விவசாயிகளின் அந்த நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், அரசு சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியமானது, பல்வேறு விதிகளின்படி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

எந்தெந்தப் பயிருக்கு? (For which crop?)

காய்கறி பயிர்கள், பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவபயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்குச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது.

விவசாயிகள்  (விவசாயிகள் )

சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கும்; இதர, விவசாயிகளுக்கு,12.5 ஏக்கர் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.1200 (ரூ.1200)

சொட்டு நீர்ப் பாசனக் குழாய் அமைப்பதற்குக் குழி தோண்ட, ஒரு ஏக்கருக்கு, 1,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், சொட்டு நீர்ப் பாசனம் அமைத்த பயனாளிகளுக்கு, துணைநிலை நீர் சேமிப்பு திட்டம் கீழ், மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, 50 சதவீதம் மானியம் அனுமதிக்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (தேவைப்படும் ஆவணங்கள்)

  • சிட்டா

  • அடங்கல்

  • ரேஷன்கார்டு

  • வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

  • சிறு, குறு விவசாய சான்று

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3

தொடர்புக்கு (Contact)

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மேற்கூறிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, 95850 98230, 99655 62700 ஆகிய எண்களில் தொடர்புகொண்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

English Summary: Subsidy for drip irrigation for horticultural farmers!
Published on: 21 July 2021, 10:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now