நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 December, 2021 8:01 AM IST
Credit : Cooling India

அரும்பாடுபட்டு விளைவித்தக் காய்கறிகளை தரம்பிரித்துப் பாதுகாப்பது என்பது மிக மிக அவசியம்.

இதற்கு, காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை தேவை என்பதால், அதனை அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாக்க இடவசதி (Accommodation to protect)

காய்கறி பயிரிடும் விவசாயிகள், அறுவடை செய்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லும் முன், தரம் பிரிக்கவும், தரம் பிரித்த காய்களை சிப்பம் கட்டவும், சந்தைக்கு கொண்டு செல்லும் வரை வெயில், மழையில் இருந்து பாதுகாக்கவும் இட வசதி தேவைப்படுகிறது. இதற்காக, தோட்டக்கலை துறை மூலம் சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

சிப்பம் கட்டும் அறை (Packing room)

சிப்பம் கட்டும் அறை என்பது, 2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.

அரசு மானியம் (Government subsidy)

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை தரம்பிரித்து சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

அம்சங்கள் (Features)

இந்தத் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை 600 சதுர அடியில் அமைக்க வேண்டும். 2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

விவசாயிகள் சிட்டா
அடங்கல்
நில வரைபடம்
ஆதார் அட்டை
ரேசன் அட்டை
வங்கி கணக்கு புத்தகநகல்
புகைப்படம்

இந்தத் திட்டத்தின்படி மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் மேலேக் கூறியுள்ள ஆவணங்களுடன் பல்லடம் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தென்னை மரத்திற்கு நுண்ணூட்டச் சத்து இடுவது எப்படி?

தரிசு நிலங்களில் விளைவிக்க ரெடியா? ரூ.13,490 மானியம் கிடைக்கும்!

English Summary: Subsidy for setting up a vegetable packing room!
Published on: 29 December 2021, 07:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now