மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 November, 2020 7:54 AM IST
Credit: Vivasayam

அங்கக விவசாயம் எனப்படும் இயற்கை விவசாயத்தின் மிக முக்கிய சவாலே உரங்கள் மற்றும் இயற்கை மருந்துகள்தான். அவ்வாறு பல இயற்கை மருந்துகள் இருந்தாலும், பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்தை அளிக்க துரித வளர்ச்சிக்கு வித்திடும் அசைவ மருந்து எது தெரியுமா? அதுதான் மீன் அமிலம்.

தேவையான பொருட்கள்

மீன் கழிவு            5 கிலோ
நாட்டுச்சர்க்கரை   5 கிலோ

தயாரிப்பு முறை (Prepartion)

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். இதனைக் காற்றுப் புகாதவாறு இறுக்கமாக மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும்.

அளவு (Quantity)

இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

பருவம் (Season)

பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம்.

மீன் அமிலத்தின் பயன்கள் (Benefits)

  • பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

  • பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது.

  • பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்க செய்யும் தரமான காய்கறிகளை விளைவிக்க வித்திடுகிறது.

  • பயிர்கள் ஒரே சீராக செழித்து வளரும்.

  • நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

  • செவ்வாழை, தர்பூசணி போன்றவற்றிற்கு காய்கறி பயிர்களுக்கும் நிறததை அதிகரிக்கப் பயன்படுகிறது.

மேலும் படிக்க...

PM-Kissan முறைகேடு - 130 கோடி பறிமுதல்!

2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!

யாரெல்லாம் காளானை சாப்பிடக்கூடாது?

English Summary: Super drug that gives natural nourishment to the crop!
Published on: 09 November 2020, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now