நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 August, 2023 4:07 PM IST
Tenkasi farmers are invited to buy vegetable crops at subsidized prices!

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2023-24 ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டமானது மத்திய மாநில நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து மேலும் அறிக...

இத்திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் கத்தர், மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய காய்கறிப் பயிர்களில் வீரிய ஒட்டு ரகம் குழித்தட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 15,000 நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.20000 மதிப்பில் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்குரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து பயன்பெறலாம்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 40 பஞ்சாயத்து கிராமங்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட, இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும், மேற்கூறிய விவசாயிகளுக்கும் வழங்கப்படும். பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 சதவீதம் திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn.gov.in, என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்திட வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இராவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய தோட்டக்கலை செயல் திட்டம் 2023-24 விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி பயிர்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 15,000 நாற்றுகள் மற்றும் உரங்கள், கத்தரி, மிளகாய், தக்காளி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக, 40 பஞ்சாயத்து கிராமங்கள் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த கிராமங்களில் 80% இலக்கு செயல்படுத்தப்பட்டு, 30% பெண் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகவும்.

மேலும் படிக்க:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 மாணக்களுக்கு இலவச UPSC பிரிலிம்ஸ் தேர்வு பயிற்சி

40% மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர்: முழு விவரம் இதோ!

English Summary: Tenkasi farmers are invited to buy vegetable crops at subsidized prices!
Published on: 02 August 2023, 04:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now