நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2021 11:29 AM IST
Credit : The Better India

தோட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது டீத்தூள் கப்பிதான். ஏனெனில் டீத்தூள் போடாத மண்ணைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மண்ணுக்கும் டீத்தூள் கப்பிக்குமான உறவு உள்ளது.

டீத்தூள் கப்பி

நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வேளையாவது டீ குடிக்கலாம். டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம். ஆனால் அதைத் தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் நம்மை வந்துசேர்கின்றன தெரியுமா?

மக்குவது எப்படி?

மண்ணின் மீது தூவப்படும் டீத்தூள் கப்பி மக்கிவிடுகிறது. ஆனால், மண்ணில் போடப்படும் டீ பேக் மக்க எவ்வளவு நாளாகுமா? என்றக் கேள்வி நம்மில் பலருக்கு எழுகிறது. டீ பேக்கும் மக்கும். ஆனால் கூடுதல் நாட்கள் தேவைப்படும்.

Manila hemp

அதாவது டீ பேக் மக்குவதற்கு குறைந்த 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்வது முக்கியம்.

டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

எண்ணற்ற நன்மைகள்

  • வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக் கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்படுத்தும் பொது தேவையற்ற குப்பைகள் சேர்வது குறைகிறது.

  • காய்கறி கழிவுகளோடு டீ தூளைச் சேர்ந்துப் பயன்படுத்தும்போது அவை வேகமாக மக்குகின்றன.

  • நீங்கள் மண் புழு உரம் தயாரிப்பவராக இருந்தால் அல்லது மாடித்தோட்ட தொட்டிகளில் மண்புழுக்கள் இருந்தால், அதில் இந்த டீ தூளை போடும்போது நிறைய சத்துள்ள இயற்கை உரம் பயிர்களுக்கு கிடைக்கிறது.

  • Coir Pith போன்று இதுவும் நீரை பிடித்து வைத்துக்கொள்வதால் வேர்களுக்கு தேவையான நீர் கிடைப்பதுடன், நீர் சேமிப்பும் நடைபெறுகிறது.

  • டீ தூளில் இருந்து வரும் வாசம் செடிகளைப் பூச்சிகள் தாக்காதவாறு செய்து, சிறந்தப் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

  • செடியைச் சுற்றிக் குழிதோண்டிப் புதைப்பது, அங்கு களைகள் வராமல் முற்றிலும் தடுக்கிறது.

டீ பேக் (Tea bag)

நாம் தூக்கிப்போடும் டீ பேக்கினால் நம் வீட்டு தோட்டத்திற்கு இவ்வளவு நன்மைகள் உள்ளன . இனிமேல் அதை தூக்கிப்போடாமல் இயற்கை காய்கறிகள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தி உர செலவை குறைப்போம்.

மேலும் படிக்க...

பயிர்க் காப்பீடு செய்யக் காலக்கெடு நீட்டிப்பு- முதல்வர் உத்தரவு!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: The immaculate lover of the soil, Tea Dust!
Published on: 13 November 2021, 11:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now