Horticulture

Friday, 18 February 2022 10:34 AM , by: Elavarse Sivakumar

நம் உடல் நலனைப் பேணிப் பாதுகாப்பதற்காக, இயற்கை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று தேங்காய். ஏனெனில் தேங்காய், இளநீர், தேங்காய் தண்ணீர், கொப்பரைத் தேங்காய் என பலவிதங்களில் நமக்கு பலனளிக்கிறது. நம்மூரில் விற்கப்படும் தேங்காய்க்கு அதிகபட்சம் 50 ரூபாய் விலை கிடைக்கும்.

ஆனால், நான் சொல்ல வருவது 60,000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்.இதன் பெயர் கொகொடிமர். கிழக்கு ஆப்ரிக்கா நாடான, சிசேர்ஸ் தீவு பகுதியில் விளைகிறது. ஒரு தேங்காயின் விலை, 60 ஆயிரம் ரூபாய். இது போன்ற தென்னை மரங்கள், 4,000 மட்டுமே அங்கு உள்ளன.

ஒரு மரம் வளர்ந்து காய்கள் தர, 100 ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில் ஒரு தேங்காய் வளர்ச்சி அடைய, ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே தான், இதன் விலை அதிகமாக இருக்கிறது.இந்தத் தேங்காயை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லத் தடை விதித்து சட்டம் வகுத்துள்ளது அந்த நாடு.

காரணம், இந்த தென்னை மரம் வேறு எங்கேயும் வளரக் கூடாது என்பதே. ஒரு தேங்காயின் எடை, 25 முதல் 30 கிலோ வரை இருக்கும்.இந்த தேங்காய் வைத்திருப்பவர் கேரளாவை சேர்ந்தவர். இவர், அந்நாட்டின் சிறப்பு அனுமதி பெற்று மூன்று தேங்காய்களை வாங்கி வந்துள்ளார்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)