மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 December, 2020 12:22 PM IST
Credit: Native Planet

பனிப்பொழிவில் இருந்து தேயிலை (Tea) செடிகளை பாதுகாக்க விவசாயிகள் கவாத்து செய்வது நல்ல பலன் தரும் என்பதால், விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு பனிக்காலம் தொடங்கியதால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொழுந்துகள் கருக தொடங்கிவிட்டன. இதனால் பச்சைத் தேயிலை சாகுபடி பாதிக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாப்பதற்காக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் தேயிலை தோட்டத்தில் மேல் கவாத்தும், பிற விவசாயிகள் அடிக்கவாத்தும் செய்கின்றனர்.

அவ்வாறு கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலைச்செடிகளின் வேர்கள் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிக்காலங்களில் மேல் காவாத்து செய்தால், தரமான தேயிலை கொழுந்துகள் வளரும்.

கவாத்து பணி முடிந்த பிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு முறையாக பராமரித்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை சாகுபடியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கோத்தகிரி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!

English Summary: Tips to protect tea plants from frost!
Published on: 09 December 2020, 12:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now