மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 June, 2021 7:03 PM IST
Credit : BioVoice News

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை (Cultivation) அதிகரிப்பதில் கவனம் செலுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மே 24 முதல் ஊரடங்கு (Curfew) நடைமுறையில் உள்ளது.

வாகனங்களில் விற்பனை

சென்னை உள்ளிட்ட தொற்று குறைந்த மாவட்டங்களில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால், வீட்டில் முடங்கிய மக்களுக்காக, தோட்டக்கலை துறை (Horticulture Department) வாயிலாக காய்கறிகள், பழங்கள் போன்றவை வாகனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கென, விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு, தோட்டக்கலை துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இக்குழுக்களில் உள்ள விவசாயிகள், நேரடியாக வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, விற்பனை செய்து வருகின்றனர்.

சாகுபடிக்கு உகந்த சூழல்

தென்மேற்கு பருவமழை (SouthWest Monsoon) காலம் துவங்கியுள்ளதால், பல மாவட்டங்களில் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதால், சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, காய்கறிகள், கீரைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும், தற்போதுள்ள சாகுபடி நிலவரங்கள் குறித்தும், தோட்டக்கலைத்துறை இயக்குனர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், அவர் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, சாகுபடி அதிகரிப்பு பணிகளில் கவனம் செலுத்தும்படி, அனைத்து மாவட்டதோட்டக்கலை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

English Summary: To increase the cultivation of horticultural crops, the Secretary of the Department of Agriculture ordered
Published on: 09 June 2021, 07:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now