மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 October, 2020 2:01 PM IST
Credit : Khrish Foods Products

தமிழகத்தில் முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு (Horticulture Department) ரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கையால, முருங்கை சாகுபடி இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியை அதிகரிக்க திட்டம்:

முருங்கை (Drumstick) அரிய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மரம். முருங்கையை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, அரசு உதவி வரும் நிலையில், முருங்கை சாகுபடிக்காக தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கிய 5 கோடி ரூபாய் (5 Crores) நிதியால், விவசாயிகளுக்கு நிச்சயம் பலன் கிட்டும். இனிவரும் காலங்களில், முருங்கை சாகுபடி மட்டும் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை (Production) எட்டுவதற்கு, மேன்மேலும் பல நல்ல திட்டங்களை அரசு உருவாக்கும் தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. சாகுபடி அதிகமானால், விவசாயிகளுக்கு இலாபமும் அதிகளவில் கிடைக்கும்.

விவசாயிகளை ஊக்குவிக்கத் திட்டம்:

மக்களிடையே பிரசித்தி பெற்றுள்ள முருங்கை, அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள். முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக் காய் இவையிரண்டும் அதிகளவில் பயன்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடியை விவசாயிகளிடையே ஊக்குவிக்க (promote) அரசு ஒதுக்கியுள்ள நிதி, விவசாயிகளுக்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முக்கியமாக இளம் தலைமுறையினரும் (Young Generation) விவசாயத்தில் கால்தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலைத் துறைப் பயிர்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த மாவட்ட மற்றும் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறையை அணுகி, பயன்பெறலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இனி கடற்கரை மணலிலும் விவசாயம் செய்யலாம்! தாவரவியல் பேராசிரியர் கண்டுபிடிப்பு!

மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள்! மாசில்லா தீபாவளிக்கு தயார்!

English Summary: To promote drumstick cultivation, Rs. 5 crore financial allocation for horticulture sector!
Published on: 22 October 2020, 02:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now