சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 November, 2020 11:59 PM IST
Trichoderma viride, which turns into a crop hormone and invigorates natural agriculture!

இயற்கை விவசாயம் என்பது தொடங்கும் காலங்களில் சவால் மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மண்ணைப் பொலபொலப்பானதாக மாற்றிவிட்டால், ரசாயன விவசாயத்திற்கு இணையான மகசூலைப் பெறுவது சாத்தியமே.இந்த சவாலை எதிர்கொண்டு, சரிநிகர் மகசூலைப் பெற டிரைக்கோடெர்மா விரிடி உதவுகிறது.

டிரைக்கோடெர்மா விரிடி பயன்கள் (Benefits)

  • டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர் பூஞ்சாணம் எனப்படும். இது வேர்களில் வளர்ந்து மற்ற பூஞ்சாணங்களை வளராமல் தடுத்துவிடும்.

  • அனைத்துப் பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.

  • பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது

    மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன.

  • வேரின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதால், வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

தயாரிக்கும் முறை (Preparation Method)

சிறிய பாட்டில்களை கழுவி சுத்தமாக காயவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை என்ற விகிதத்தில் கலந்து ஒரு பாட்டிலுக்கு 200 மில்லி வீதம் ஊற்றவேண்டும். பிறகு இவற்றை இனாகுலேட் செய்யவும்.அதாவது கிருமிகள் இருந்தால் அவற்றை வெளியேற்ற 2 மணிநேரம் சூடேற்றவும்.

அவை ஆறியபிறகு எடுத்து வெளிப்புறம் உள்ள கிருமிகளை வெளியேற்ற யூவி (UV)லைட்டில் வைக்கனும். டிரைக்கோடெர்மா விரிடியின் தாய்வித்தை சிறிதளவு எடுத்து பாட்டிலில் போட்டு அவற்றை படுக்கை வசமாக வைக்கனும்.

படுக்கை வசமாக வைப்பதால் பாட்டில் முழுவதும் டிரைக்கோடெர்மா விரிடி வளர்ந்துவிடும். இவ்வாறு படுக்கை வசமாக வைக்காவிடில் சர்க்கரைப்பாகு இருக்கும் அளவுக்குத்தான் டிரைக்கோடெர்மா விரிடி வளரும்.

டிரைக்கோடெர்மா விரிடி நன்றாக வளர 7 நாட்கள் ஆகும்.பிறகு அவற்றை எடுத்து மிக்சியில் ஊற்றி சிறிது நேரம் அரைக்க வேண்டும்.

ஒரு பாட்டிலுக்கு 200மில்லி டிரைக்கோடெர்மா விரிடியில் 400 கிராம் டால்கம் பவுடரை கலந்து நிழலில் உலர்த்தவேண்டும்.

இதனை அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்.

அடியுரம்

2- 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 20 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவில் கலந்து நிழலில் ஒரு வாரம் வைத்திருந்து பிறகு பயிருக்கு போடலாம்.
தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் இவ்வாறு போடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

நாற்று நேர்த்தி

நாற்று நேர்த்தி ஒரு கிலோ டிரைக்கோடிடர்மா விரிடியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றை நனைத்து நடவு செய்யலாம்.உலர்ந்தவற்றை எடுத்து சலித்து 1 கிலோ வீதம் எடுத்து சலித்து பாக்கெட் போடவேண்டும்.

மேலும் படிக்க...

செரிமானப் பிரச்னை தீர சீரகம்- அக்டோபர் மாதத்தில் பயிரிட சிறந்த மருத்துவ மூலிகை!

இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!

English Summary: Trichoderma viride, which turns into a crop hormone and invigorates natural agriculture!
Published on: 23 October 2020, 08:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now