சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 November, 2020 11:15 AM IST
Home Garden
Credit : Tamil Webdunia

சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்தால் தான், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது. சத்தான காய்கறி (Vegetables) வாங்கி சாப்பிட ஆசையா மார்க்கெட்டில் வாங்கினால், இது இரசாயன உரமிட்டு (Fertilizer), பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வளர்த்திருப்பாங்களோ, உடலுக்கு ஆகாதோனு சந்தேகம் வருகிறது.

நமக்கு நாமே காய்கறி உற்பத்தி:

உணவு உற்பத்தியில் பசுமைப்புரட்சிக்கு (Green Revolution) பிறகு, ரசாயன பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து விடுபட்டு, சோற்றில் கை வைக்கும் போது நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு நாமே காய்கறி உற்பத்தி (Vegetable Production) செய்ய வேண்டும். இதுவும், இப்பொழுது சாத்தியமாகி விட்டது.

மாடித் தோட்டத்திற்கு மானியம்:

தோட்டக்கலைத்துறையில் (Horticulture) வீட்டு காய்கறி தோட்டம், மாடி காய்கறி தோட்டம் துவங்க மானியத்துல (Subsidy) விதை கொடுக்கிறார்கள். வெயில் படுகின்ற மாதிரி கொஞ்ச இடமிருந்தாலும், நீங்களும் விவசாயி (Farmer) தான். காய்கறி விளைவித்து, சுவையாக சமைத்து, உண்ணலாம். தற்போது பருவ மழை காலம் என்பதால், காய்கறிகள் பயிரிட ஏற்ற தருணம். வீடுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் மாடியில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டால் நன்றாக வளரும். தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி உற்பத்தி பெருக்கம் திட்டம் (Vegetable Production Multiplication Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள் (Vegetable Seeds) மானியத்தில் வழங்கப்படுகிறது. தக்காளி, அவரை, வெண்டை, பீன்ஸ், முருங்கை விதை பாக்கெட்டுகள் அடங்கிய 'கிட்' ஒன்றின் விலை 25 ரூபாய். மானிய விலை, 10 ரூபாய் போக, 15 ரூபாய் செலுத்தி மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.இந்த விதை 'கிட்' பெற, ஆதார் நகல் (Aadhar Card) கொண்டு வர வேண்டும். தேவைப்படுவோர், அந்தந்த பகுதியில இருக்கின்ற தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி தெரிவித்திருக்கிறார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!

ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!

English Summary: Vegetable seeds at subsidized prices! If you set up a home garden, nutritious food!
Published on: 28 November 2020, 11:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now